×

அறந்தாங்கி அருகே துணிகரம்: நகைகடை பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

 

அறந்தாங்கி,அக்.17: அறந்தாங்கியில் பூட்டி இருந்த 2 கடைகள் பூட்டை உடைந்து தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரிய கடை வீதியில் கார்த்தி (40), சுப்பிரமணியன்(68), பார்த்திபன்(66) ஆகிய 3 பேரும் நகைக்கடை வைத்து உள்ளனர். கண்ணன்(65) இவர் நகை பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் தங்களது கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். நேற்று காலை கடைக்கு வந்த போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான கடையில் 4 பவுன் தங்கம், 30 ஜோடி கொலுசு, ரெத்தினம் என்பவரது கடையில் 10 கிராம் வெள்ளி நாகம், வெள்ளி தாயத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அறந்தாங்கி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post அறந்தாங்கி அருகே துணிகரம்: நகைகடை பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Arantangi ,
× RELATED அறந்தாங்கி அருகே பரபரப்பு திமுக நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு